Thursday, 6 October 2011

மனப்பட்சியுடன் வாழ்தல்

சிறு துளியுமகலாது
என்னோடு ஒட்டியபடி அலைகிறது மனப்பட்சி
பிடுங்கி
வெளியே எறியவும் முடியவில்லை
எப்போதும் என்னை எள்ளி நகையாடுகிறது
கோபம் கொண்டு திட்டித் தீர்க்கிறது
சிலசமையம் பரிகசிக்கிறது
நைப்புடைக்கிறது
பகைவனாய் நின்று எதிர்வாதம் புரிகிறது
ஒவ்வொரு கணமும் என்னை எச்சரிக்கிறது
எனக்காக பட்சாதாபப்படுவதும் கண்ணீர் விடுவதுமுண்டு
விடையளிக்க முடியா வினாக்களை எழுப்பி
நான் திகைத்திருக்கும் பொழுதில்
கைகொட்டிச் சிரிக்கிறது
தன்வழிச்செல்லென அடம்பிடிக்கிறது
பணியமறுத்து என்வழிச்சென்றால்
எனக்கான பொறியை அதுவே  தயார் செய்கிறது
எப்போகிலும் அரிதாய் ஒரு பொழுதில்
என்முதுகில் தட்டிக்கொடுத்து பெருமிதங்கொள்கிறது
அத்துளிப் பொழுதுக்காகவேனும்
பாழாய்போன வாழ்கையை
வாழ்ந்து தொலைத்துவிடலாம் போலத்தோண்றுகிறது
0
19 மார்ச் 2010

No comments:

Post a Comment

உங்களிடமிருந்து..