வெய்யில்
நீர் வற்றிக்கொண்டே போகிறது
உச்சியில் இன்னும் மிச்சமாய்
ஓரிரு ஆம்பல் பூக்கள்
தப்புத் தண்ணியில் அள்ளிப்போவதற்கு
பறியொடு காத்திருக்கிறான் செம்படவன்
நீரிடைத் துலங்கும் திட்டில்
ஓடு மீன் ஓடி உறு மீன் வருமென
ஒற்றைக்காலில் தவங்கிடக்கிறது கொக்கு
எந்தவிதச் சலனமுமின்றி
வாழுமிக் கணத்தை நீந்திச் சுகிக்கிறது
மீன் குஞ்சு
பின்பனி 2008
No comments:
Post a Comment
உங்களிடமிருந்து..