ஒரு பொழுதில் ஓவெனக் குழறி அழும்
தன் கரத்தால்
மாரிலே மாறிமாறழ அறையும்
இன்னொரு பொழுதில் கல்லிடை மோதி
களுக் எனச் சிரிக்கும்
முகம் நாணிச் சிவக்கும்
துயரம் கப்பிய நாளொன்றில்
ஓங்காரம் கொண்டு குமுறி வெடிக்கும்
குவலையம் அனைத்தையும் விழுங்கிட விளையும்
பசி கண்ட விலங்கென என எக்காளமிடும்
நடு இரவில் தன் மடியில்
உயிர் பல பிடுங்க
துரோகத்திற்கு துணைபோகும்
ஈழப் பொதுமகன் ஒருவனாய்
மௌனித்திருக்கும்
களைப்புற்ற வேளை
எற்றுண்டு கிடந்த சாதாளைப் பிட்டியிலே
தலைசாய்த்துத் தூங்கும்
மெல்லச் கிணுங்கி விம்மி வெடித்து
இயலாத போதெல்லாம் எழுதும் சோகத்தை
கரையெல்லாம் நுரைசிந்த
பிணங்களை சுமந்து வந்து
கiயிலே வைத்து
கைகட்டி நின்று கண்ணீர் வடிக்கும்
எப்போது கரையுடைக்கும்
என அறியாக் கவிஞனாய்
மோனத் திரையுள்
கட்டுண்டு கிடக்கும்
எனக்குள் ஒரு பெரும் கடல்
இலையுதிர்காலம் 2001
('அஃதே இரவு அஃதே பகல்' திரட்டிலிருந்து))
No comments:
Post a Comment
உங்களிடமிருந்து..